Sunday, March 11, 2018

Simple story from Ramayanam-Tamil

*இராமாயணத்தில் ஒரு காட்சி.*....

ஓர் கண்ணோட்டம்.
வாலியும் சுக்ரீவனும்
அண்ணன் தம்பிகள்.
வாலி கொடியவன்.
சுக்ரீவன்நல்லவன்.

வாலி சுக்ரீவனுடைய
நாட்டையும்மட்டுமல்ல
அவனதுமனைவியையும்
அபகரித்துக்கொண்டான்.

சுக்ரீவனால்
அவனதுஅண்ணனை எதிர்த்து
ஒன்றும்செய்யமுடியாமல்
திகைத்துக்கொண்டிருந்தான்.

ஸ்ரீ ராமன்
காட்டில்வந்துகொண்டிருந்தபோது
சுக்ரீவன்
ஸ்ரீராமனைச் சந்தித்தான்.

ஸ்ரீராமா
அபயம்
என்று நமஸ்கரித்தான்.

ஸ்ரீராமனிடம்
தன்வரலாற்றைச் சொல்லி
தான்இழந்தது
அனைத்தையும்
வாலியிடமிருந்து
மீட்டுத் தரும்படி வேண்டினான்.

ஸ்ரீராமனும்
அப்படியே ஆகட்டும் என்று
வாக்களித்தான்.

வாலி மிகுந்த பலசாலி.

ஒரேபாணத்தில்
ஏழு மரங்களை யாரால்
துளைக்கமுடியுமோ
அவர்களால் மட்டுமே
வாலியிடம் சண்டை
போடமுடியும்.

நீங்கள்அப்படிச் செய்து
காட்டுவீர்களா என்று
சுக்ரீவன் ஸ்ரீ ராமனைக்
கேட்டான்.

ஸ்ரீராமனும்
ஒரேபாணத்தைவிட்டு
ஏழு மரங்களைத்
துளைத்துக்காட்டினார்.

சுக்ரீவன்
மிகவும் மகிழ்ந்தான்.

நீ இப்பொழுது
வாலியிடம் சண்டை போடு.

தக்க சமயத்தில்
நான் உனக்குத் துணையாக
வருவேன் என்று
ஸ்ரீ ராமன்சொன்னான்.

இந்த வார்த்தையை நம்பி
சுக்ரீவனும்
வாலியைச் சண்டைக்கு
அழைத்தான்.

வாலியும் சண்டைக்கு
வந்தான்.
இருவரும் சண்டை இட்டார்கள்.

வாலி
சுக்ரீவனை
நையப் புடைத்து
அனுப்பினான்.
பலமாக அடிபட்டு வந்த சுக்ரீவன்,

ஸ்ரீராமா
உன்னை நம்பி அல்லவா
நான் அவனிடம் சண்டைக்குச்
சென்றேன்.

இப்படிக் கைவிட்டு விட்டாயே.
இது நியாயமா என்று
அழுதான்.

சுக்ரீவா,
நீயும் வாலியும்
ஒரே மாதிரி இருந்ததால்
யார் சுக்ரீவன் யார் வாலி
என்று என்னால்
அடையாளம் காணமுடியவில்லை.

நான் அவன் என்று
உன்னைத் தாக்கிவிட்டால்
என்னசெய்வது என்றுதான்
பேசாமல் இருந்துவிட்டேன்.

இப்பொழுது
நான்ஒரு மாலைதருகிறேன் ,

இதைக் கழுத்தில் அணிந்துகொண்டு
நீ அவனிடம் சண்டைக்குப் போ.

நான் நிச்சயம்
உன்னைக்காப்பாற்றுவேன்
என்று
ஸ்ரீராமன் சொல்லி,

சுக்ரீவனை மீண்டும்
வாலியிடம்
சண்டைக்கு அனுப்பினான்.

வாலியிடம்
சண்டை போடுவதாய் இருந்தால்
அவன் எதிரில் நின்று
சண்டை போடக்கூடாது.

அவன் எதிரில்
யார் வருகிறார்களோ
அவர்கள் பலத்தில்
பாதியை வாலி
எடுத்துக் கொள்வான்
என்று
சுக்ரீவன் சொல்லிவிட்டுச்
சண்டைக்குப் போனான்.

சுக்ரீவன் சொன்னது போல
ஸ்ரீ ராமனும் வாலியின்
பின்னால் மறைந்து நின்று
வாலியின் மீது அம்பு தொடுத்தான்.

வாலி
ஸ்ரீ ராமனைப் பார்த்து

ஸ்ரீ ராமா
உனக்கும் எனக்கும் எந்தப் பகையும்
இல்லை.

நீ என்னைக் கொல்வது
தர்மத்திற்குப்புறம்பானது.

எதிரில் நின்று
சண்டை போடுவதே வீரனுக்கு அழகு.

நீயோ
கோழைபோல்
மறைந்து நின்று
என்மீது
அம்பு தொடுத்து
என்னை சாக அடிக்கிறாய்.

வானத்து சந்திரனில்
களங்கம் இருப்பதுபோல்

காலம்உள்ளளவும் நீ செய்த
இந்தக் களங்கமான செயல்
உன்பெயரோடு சேர்த்து
இனி
உன்னை எல்லோரும்
ராமச்சந்திரன் என்று
அழைக்கட்டும் .

நீ
ராமனல்ல ராமச்சந்திரன் என்று
சபித்தான்.
ராமாயணத்தில் இந்தச் சம்பவம் ஏன்
எழுதப்பட்டது?

இதன்மூலம் நமக்கு என்ன
அறிவுரை வழங்குகிறார்கள்?

வாலியும் சுக்ரீவனும்
குரங்குகள்.

குரங்கு என்பது
நமது மனம்தான்.

வாலி கெட்ட மனம்.
சுக்ரீவன் நல்ல மனம்.

நல்ல மனதைவிட
கெட்ட மனமே
ஆதிக்கம் செய்யும்.

இதை உணர்த்தவே

வாலி
சுக்ரீவனுடைய
நாடு முதல் அனைத்தையும்
பறித்துக்கொண்டதாகச்
சொல்லப்பட்டது.

ஸ்ரீ ராமன் என்பது அறிவு.

நல்லமனம்
அறிவின் துணையை நாடியது.
ஏழு மரங்களை
ஒரே பாணத்தால் யாரால்
துளைக்கமுடியுமோ,

அவர்கள்தான்
வாலியை வெல்லமுடியும் என்றது
என்னவென்றால் ,

காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம் ,
மதம்,
மாச்சர்யம்,
கொலை
என்ற ஏழையும்

வைராக்கியம் என்ற
ஒரே பாணத்தால் யாரால்
வெல்லமுடியுமோ
அவர்களால்தான்
கெட்ட மனதை
வெல்லமுடியும் என்பதே.

நமக்குள்
நல்ல மனம் எது ,
கெட்ட மனம் எது என்று

நம்முடையஅறிவிற்குப்
புரியாமல்இருப்பதே
ஸ்ரீ ராமனுக்கு

முதலில் வாலி யார்?
சுக்ரீவன் யார்? என்று
புரியாமல்போனது.

வாலியின் எதிரில்
நின்று சண்டை போடக்கூடாது
என்றது ஏன்?

கெட்ட மனதை
நேரில் நின்று அடக்கமுடியாது,

....

No comments:

Post a Comment