Thursday, April 26, 2018

Why silk saree at marriage

#திருமணத்திற்கு #ஏன் #பட்டு #சேலை #அணிகின்றனர் ?

பட்டு சேலைகள் அணிவதன்
விஞ்ஞான ரகசியம் !!!

வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே
என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன.

நானும் சிந்தித்தேன்

ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.

அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.
இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்

இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும்
காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.

அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும்

தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
அதில் யார் எப்படி என்று தெரியாது.

எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும்.

தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால்

நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும்பொழுது
ஏன் அணிகிறார்கள் என்றால்
நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

இவை எதுவும் தெரியாமல்
பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு

தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

Wednesday, April 25, 2018

IT Tamil meaning

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி

- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்குப்
பகிரலாம் -

Tuesday, April 24, 2018

Be careful in that

நெருப்பில் முடி பொசுங்க கூடாது என்று கூறுவதின் ரகசியம்:

இன்றளவும் கிராமப்புரங்களில் நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.

அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.

இதன் ரகசியம்தான் என்ன?

கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது .

அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.

ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி .

ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும்.

இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல .

அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.

இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.

முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.

தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.

அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.

இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது .

இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும் .

அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும் .

அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில் மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள்.

அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும் .

அதை பொருத்தி இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.

அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள்.

அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது .

அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது .

அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.

இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.

அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.

அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.

அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.

இதுதான் வித்தியாசம் .

ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும்.

காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.

சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள்.

கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.

இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே .

நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள்.

இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ, பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை .

இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும் .

நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும்.அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.

எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம் படிந்துஇருக்கும்.

மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)

அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,

ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும் .

நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது .

போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு .

அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்.

எனவே கவனமாக இருக்கவும்

தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்.
Source: Tamil.....

Kaanchi Priyava sonna medicines

முதுகு வலிக்கு காஞ்சி பெரியவா சொல்லும் மருந்து
☘☘☘☘☘☘
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! எல்லா  வகை...  வைத்தியமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சது தான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. குணப்படுத்தணும்" என்றார்.

அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

உடனே பெரியவாள் ''முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊற வச்சு, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட செரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதின்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போகட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மிளகு ரசம், பெரண்டை துவையல் பண்ணி சாப்டு..! என்ன?" என்றார்.

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" என்றார் அந்த பக்தர்.

மூணு மாதம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.

வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரசம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் கை மேல் பலன் கொடுத்திருந்தது.

பெரியவா திருவாக்கிலிருந்து சில                      health tips...

வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - விளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. விளக்கெண்ணெய் - வருடத்தில் ரெண்டு தரம், காலைல வெறும் வயித்துல குடிச்சா..... வயிறு செரியா இருக்கும். வயித்துவலி இருந்தா, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா செரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனமும் கை,கால், முட்டிகள்ல தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள்.☘☘☘

Monday, April 23, 2018

Some important temples

தீரா வினையகற்றும் தீர்த்தங்கள்!⚘🌿

⚘🌿⚘🌿⚘⚘::::::::::::::::::::🌿⚘🌿⚘🌿⚘🌿

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அதனதன் தீர்த்தத்தால் மகிமை உண்டு, பெருமை உண்டு. அவற்றில் நீராடுவோருக்குப் பல்வகையான நலன்கள் உண்டு.

அந்தவகையிலான சில தலங்களை இங்கே தரிசிப்போம்.⚘🌿

1. தலத்தின் பெயர்: ⚘🌿
திருக்கழுகுன்றம்,

இறைவன்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் திகழ்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் உள்ளவர்).
இறைவி: சொக்கி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்),
திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

செங்கல்பட்டு-மகாபலிபுரம் வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மி. தொலைவு. கடற்கரைச் சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியாகவே செல்கின்றன. கோயில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறுகோடியில் மிக்க புகழ் வாய்ந்த ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறந்து மிதந்து வருகிறது.

இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபட பாத்திரமின்றித் தவித்தபோது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்தான்.

அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகக் கூறப்படுகிறது.

நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலை நேரத்தில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் பறந்தோடிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

2. தலத்தின் பெயர்: ⚘🌿
திருக்கருகாவூர்.
இறைவன்: முல்லைவன நாதர்,
இறைவி: கர்ப்பரட்சாம்பிகை

தஞ்சாவூர்-
கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில், கும்பகோணத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவு.

தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கே 20 கி.மி. தொலைவு. தஞ்சாவூர்-மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் திருக்கருகாவூர் உள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள், இதர வாகனங்கள் மூலம் இத்தலத்தை அடையலாம்.

இத்தல  கிழக்கு கோபுர வாயிலுக்கு வெளியே தேவலோகப் பசுவான காமதேனுவால் உருவாக்கப்பட்ட க்ஷீரகுண்டம் என்ற தீர்த்தம் உள்ளது.

திருமணம் கூடிவராத கன்னியரும், குழந்தைப்பேறு இல்லாத பெண்களும் இந்த கோயிலுக்கு நேரில் வந்து க்ஷீரகுண்டத்தில் நீராடி அம்பாள் சந்நதிப் படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள், வெகு விரைவில் தம் விருப்பம் ஈடேறப் பெறுகிறார்கள்.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும்.

அதேபோல கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்ப ரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எந்தக் கோளாறுமின்றி, சுகப்பிரசவம் உண்டாகும்.

இதனால் பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதும் அம்பிகையின் கருணையே.

3. தலத்தின் பெயர்: ⚘🌿

திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருவாசி. இறைவன்: மாற்றுரைவரதீஸ்வரர்,
இறைவி: பாலாம்பிகை என்ற பாலசுந்தரி.

திருச்சி-முசிறி சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருவாசி பேருந்து நிறுத்தத்திலிருந்து நகரத்திற்குள் ஒரு கிளைச்சாலையில் 1/2 கி.மீ. சென்றால் ஆலயத்தை அடையலாம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாசி செல்ல நகர பேருந்து வசதி உள்ளது.

கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) ஏற்பட்டது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை.

எனவே, பெரியவர்களின் ஆலோசனையின்படி, பெருமான் அருள்புரியும் கோவிலுக்குச் சென்று வழிபட்டான்.

அச்சமயத்தில் திருஞானசம்பந்தர், மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார்.

இதயறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான்.

அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி, ‘துணிவளர் திங்கள் துலங்கி விளங்க….’ என்று பதிகம் பாட, நோய்நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்று ஆடினார்.

இத்தலத்தில் உள்ள அன்னம் பொய்கை தீர்த்தத்தில் நீராடி பாம்பின் மேல் நடனமாடும் நடராஜரைத் தரிசித்தால்  நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் குணமாகும்.

அம்பாள் சந்நதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கிறார்கள்.

துவாரபாலகியர் மூலம் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

4. தலத்தின் பெயர்: ⚘🌿

திருவாஞ்சியம். இறைவன்: வாஞ்சிநாதர் என்ற வாஞ்சி லிங்கேஸ்வரர்.

இறைவி: மங்களநாயகி.

கும்பகோணத்திலிருந்து 28 கி.மீ. தொலைவு. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - நன்னிலம் பாதையில் உள்ள அச்சுதமங்கலம் ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவு. திருவாரூர், நன்னிலத்திலிருந்தும் வரலாம்.

நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவு. இத்தலத்தில் அமைந்துள்ளது குப்தகங்கை தீர்த்தம்.

மக்கள் அனைவரும் தன்னில் நீராடித் தம் பாவங்கள அனைத்தையும் தன்னில் கரைத்துவிட, அதனால் பாவங்களைச் சுமந்த கங்கை, அவற்றைப் போக்கி உதவுமாறு இறைவனை வேண்டிக் கொண்டாள்.

ஈசனும், எமனுக்கே பாவவிமோசனம் தந்த ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் சென்று வழிபடுமாறு கூறினார்.

கங்கையும் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

இதனாலேயே இந்த தீர்த்தம் குப்த கங்கை எனப் பெயர் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிராகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்கள்.

அச்சமயம் செய்யும் அனைத்துப் பிரார்த்தனைகளும் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

5. தலத்தின் பெயர்:⚘🌿
திருமணஞ்சேரி.

இறைவன்: அருள் வள்ளல் நாதர் என்ற உத்வாக நாதர்.

இறைவி: கோகிலாம்பாள் என்ற யாழின்மென்மொழியம்மை.

மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் குதுளம் என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்திலிருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.

திருமணம் கைகூடாமல் தடைபட்டு வருந்துவோர் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வெகுவிரைவில் திருமணம் நடைபெறும்.

மேலும் ராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் உன்னதமானது. ராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இந்த தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டுள்ள ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும் பால் பொங்கல் நிவேதனமும் செய்து தாம் சாப்பிட, ராகு தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் கிட்டுவது நிச்சயம் என்கிறார்கள் அனுபவப்பட்ட பக்தர்கள்.

Sunday, April 22, 2018

Benefits of Herb Powder

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?*
*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு

சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.நன்றி வணக்கம்.

பகிர்வு: லாராகுளோரி

நன்றி;  உணவேமருந்து பகிரிகுழு.